பெண் காவலர் உடன் கள்ளத் தொடர்பு: தன்னை அடித்து துன்புறுத்துவதாக கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்...  

பெண் காவலர் உடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு அடித்து துன்புறுத்திய கணவர் குறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.

பெண் காவலர் உடன் கள்ளத் தொடர்பு: தன்னை அடித்து துன்புறுத்துவதாக கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்...   

பெண் காவலர் உடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொண்டு அடித்து துன்புறுத்திய கணவர் குறித்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார்.

கரூர் செல்லாண்டி பாளையத்தை சேர்ந்த கார்த்தி செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வனிதா என்ற பெண்ணை ஆறு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி கார்த்தியை திருமணம் செய்திருக்கிறார் வனிதா. இதனால் பெற்றோருடன் தொடர்பு இல்லாமல் இருந்திருக்கிறார் வனிதா. இந்த காதல் தம்பதியருக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கரூர் ஆயுதப்படை காவலராக இருக்கும் கௌசல்யாவுக்கும் கார்த்திக்கும் நெருங்கம் ஏற்பட்டுள்ளது. கௌசல்யாவுக்கு திருமணமாகி குழந்தை இருந்தாலும் கார்த்தியுடன் அவர் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து கௌசல்யா  கேட்டபோது கார்த்தி அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். நாளடைவில் இந்த தொடர்பு வீடு வரை வந்ததால், மனமுடைந்த கௌசல்யா நேற்று இருவரும் செல்போன் கடையில் தனிமையில் இருந்த போது பெண் காவலரின் உடையை எடுத்துக்கொண்டு வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  புகார் அளித்தார்.