ஆடு மேய்க்க சென்ற பெண் தற்கொலை.. கொலையா? என போலீஸ் விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே மந்தை ஆடுகளை மேய்த்த போது பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஆடு மேய்க்க சென்ற பெண் தற்கொலை.. கொலையா? என போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராம எல்லைக்கு உட்பட்ட காப்புக் காடு பகுதியில்  கள்ளக்குறிச்சி அடுத்த ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த இருப்பர் மகள் புஷ்பா. இவர்கள் இருவரும் செம்மறி மந்தை ஆடுகளை கூலிக்கு மேய்த்து வருகின்றனர். சம்பவத்தன்று புஷ்பா ஆடு மேய்க்க சென்ற போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அங்கு வந்த உறவினர்கள் தூக்கில் தொங்கி புஷ்பாவை உடலை பார்த்து கதறி அழுது உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி அனுப்பி வைத்தனர்.

தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட புஷ்பா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுட்டு   கொலையாளி தலைமறைவாகி விட்டார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.