"தற்கொலை எண்ணம்".. கிணற்றில் குதித்த பெண்.. இறுதியில் குழந்தைகள் உயிர் பறிபோன சோகம்!!

பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததில் தாய் உயிர்தப்பிய நிலையில், இரண்டு குழந்தைகளும் பரிதாபக உயிரிழந்தனர்.

"தற்கொலை எண்ணம்".. கிணற்றில் குதித்த பெண்.. இறுதியில் குழந்தைகள் உயிர் பறிபோன சோகம்!!

ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் உள்ள தியோரியைச் சேர்ந்த மம்தா தேவி (25) என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் பாசன கிணற்றில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் குதித்துள்ளார்.. 

நேற்று முன்தினம் குடும்ப தகராறு காரணமாக தன்னுடைய 5 வயது மகள் சுஹானி மற்றும் 2 வயது மகன் சிக்குவுடன் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி மம்தா தேவி, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் அந்த ஊரில் உள்ள பாசன கிணற்றில் குதித்துள்ளார். இதையடுத்து மம்தா தேவி மற்றும் குழந்தைகளும் காணவில்லை என்பதை அறிந்த குடும்பத்தினர் அவர்களை தேடினர்.

இந்நிலையில், மம்தா தேவி தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஊர்மக்கள் கிணற்றில் குறித்த மம்தாவையும் குழந்தைகளையும் மீட்டு சமுதாய சுகாதார மையத்திற்கு தூக்கி சென்றனர்..

அப்போது இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.. மம்தா தேவி சிறுகாயங்களுடன் உயிர்தப்பினார். குழந்தைகளின் உடல்கள்  பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆனால், இந்த சம்பவத்தில் தாய் சிறு காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், இரண்டு குழந்தைகளும் பரிதாபக உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.