கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு....”என் சாவுக்கு நீ தான் காரணம் ”மாணவியின் குறுஞ்செய்தியால் சிக்கிய காதலன்....!!

காதலித்து ஏமாற்றியதால் மனமுடைந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட காதலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு....”என் சாவுக்கு நீ தான் காரணம் ”மாணவியின் குறுஞ்செய்தியால் சிக்கிய காதலன்....!!

சென்னையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி கடந்த 30- ஆம் தேதி அவருடைய உறவினர் வீட்டு குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக டி.பி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் மாணவியின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் அவருடன் கல்லூரியில் படிக்கக்கூடிய ஸ்ரீராம் என்பவருடன் நெருக்கமான புகைப்படங்கள் இருந்துள்ளன.

மேலும், ஸ்ரீராமும் தற்கொலை செய்துகொண்ட சிறுமியும் காதலித்து வந்ததாகவும், அப்போது திடீரென  மாணவியை விட்டுவிட்டு ஸ்ரீராம் வேறொரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஸ்ரீராம் அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் காதலிக்கு அனுப்பி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த காதலி தனது சாவிற்கு நீ தான் காரணம் என ஸ்ரீராமுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் பெற்றோர் டி.பி சத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இந்த வழக்கானது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு அங்கு விசாரணையில் மாணவியிடன் ஸ்ரீராம் நெருங்கிப் பழகியதும், சிறுமியை ஏமாற்றியதும் தெரியவந்தது. அதனைதொடர்ந்து ஸ்ரீராம் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டன்ர்.   

இந்நிலையில்  தற்கொலை செய்துகொண்ட மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி அவருடன் பாலியல் உறவில் ஸ்ரீராம் ஈடுபட்டதும் நிரூபணம் ஆனதையடுத்து அவர் மீது போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.