தவறான ஊசி செலுத்தியதால் இளம் பெண் பலி?

பரமக்குடியில் தவறான ஊசி செலுத்தியதால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறி அவருடைய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தவறான ஊசி செலுத்தியதால் இளம் பெண் பலி?

பரமக்குடியில் தவறான ஊசி செலுத்தியதால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறி அவருடைய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த அருங்குளம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடைய மனைவி பாக்கியலட்சுமி. இவர் கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்காக பாக்கியலட்சுமிக்கு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். மருத்துவர் இல்லாமல் செவிலியர் மட்டுமே சிகிச்சை அளித்ததால், தவறான ஊசி செலுத்தப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். 

மேலும் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இவருக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.