கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது... அரை கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்...

சீர்காழி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது... அரை கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல்...

மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சீர்காழி போலீசார் மற்றும் தனிபடை போலீசார்  சீர்காழி நகர் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீர்காழி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற  வாலிபரை பிடித்து விசாரனை செய்தனர். விசாரணையில் அவரது பெயர் காட்டுபூனை (எ) தெட்சிணாமூர்த்தி வள்ளுவக்குடி பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவர் கஞ்சா விற்பனை செய்வதும்  தெரியவந்தது.

உடனடியாக  போலீசார் கைது செய்து. மேலும் அவரிடம் இருந்து 53 பாக்கெட்டில் இருந்த 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை சீர்காழி போலீசார்  பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.