மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை...

திருச்செந்தூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை...

திருச்செந்தூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவர் நீண்ட நேரமாக வீட்டுக்கு வராததால் அவரை தேடி அவருடைய உறவினர்கள் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சிவமுருகன் நண்பர்களுடன் மதுஅருந்தி கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதும், அப்போது வீரபாண்டியபட்டனத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், சிவமுருகனை விறகு கட்டையால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சண்முகசுந்தரத்தை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.