பிளக்ஸ் போர்டு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை.. தென்காசியில் பரபரப்பு

தென்காசியில் பிளக்ஸ் போர்டு வைப்பதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதத்தால் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளக்ஸ் போர்டு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை.. தென்காசியில் பரபரப்பு

தென்காசியில் பிளக்ஸ் போர்டு வைப்பதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதத்தால் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையம் அருகே உள்ள மயிலப்பபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த துரை, சாம்பிளக்சன் ஆகியோருக்கும் இடையே பிளக்ஸ் போர்டு வைப்பதில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஆத்திரத்தில் துரை, சாம்பிளக்சன் இருவரும் இணைந்து மணிகண்டனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.