கணவன் கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்து கள்ளக்காதலனோடு பைக்கில் சென்ற மனைவி.! 

கணவன் கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்து கள்ளக்காதலனோடு பைக்கில் சென்ற மனைவி.! 

பாபா படத்தில் ’கதம் கதம்’ என்று ரஜினி சொல்வதைப் போல, காவலருடன் உறவில் இருந்தது முடிந்து போன விஷயம் என பஞ்ச் வசனம் பேசிய பச்சைக்கிளி, அதே காவலருடன் இருசக்கர வாகனத்தில் சிட்டாய் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், முத்தியால்பேட்டை காவல் நிலையம் எதிரே தனியார் கொரியர் சர்வீஸ் கடையை நடத்தி வருகிறார். இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூபாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு கல்லூரி படிக்கும் வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது மனைவி முத்தியால் பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், தகாத உறவின் போது எடுக்கப்பட்ட தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வைத்து பெஞ்சமின் 20 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும், கொலைமிரட்டல் விடுப்பதாகவும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

மேலும், தனது மனைவி தகாத உறவில் இருந்தது தனக்கு தெரியாது என்றும், கடந்த ஜூன் மாதம் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பின்னரே தனக்கு அனைத்து விசயங்களும் தெரிய வந்ததாகவும் ஜெயப்பிரகாஷ் கூறிய நிலையில், நேற்று காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த ரூபாவதி, தனது கணவர் ஜெயப்பிரகாஷ் மீது, பரபரப்பு எதிர் புகார் மனுவை கொடுத்து அதிர்ச்சி அளித்துள்ளார்.

இதில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான தனது கணவர் ஜெயப்பிரகாஷ், தொடர்ச்சியாக தன்னை சித்தரவதை செய்து வந்ததாகவும், தனது பெயரில் உள்ள ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அபகரிப்பதற்காகவே, இதுபோன்ற அவதூறான தகவல்களை பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார். 

குறிப்பாக காவலர் பெஞ்சமின் பிராங்கிளின் தனக்கு நெருங்கிய நண்பர் எனவும், அவருடன் இருந்த உறவு 5 வருடங்களுக்கு முன்பே முடிந்து போன விஷயம் எனவும் கூறும் ரூபாவதி, தாம் விவாகரத்து கேட்டதால், தன் கணவர் சொத்து போய்விடும் என்ற பயத்தில் இதுபோன்ற தவறான புகைப்படங்களை வெளியிட்டு, தன்னை அவமானப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்படி கணவர் மீது புகார் அளித்த ரூபாவதி, காவலருடன் உறவில் இருந்தது முடிந்து போன விஷயம். காவலர் பெஞ்மின் பிராங்க்ளினுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பஞ்ச் வசனம் பேசிய பச்சைக்கிளி ரூபாவதி, அடுத்த பத்தாவது நிமிடத்தில், காவல் ஆணையர் அலுவலகத்தின் வெளியே வந்தவுடன், அதே காவலர் பிராங்க்ளினுடன் இருச்சக்கர வாகனத்தில் சிட்டாய் பறந்து விட்டார்.