காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் கிழித்த இளைஞன்...

காதலர்களை சேர்த்து வைப்பதற்கு தோழிகள் நினைத்திருந்த நிலையில் காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கிழித்துள்ளார்.

காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் கிழித்த இளைஞன்...

ஆந்திரா | கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தபஸ்வி. 21 வயதான இவர் விஜயவாடாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வந்தார். பெற்றோர் வேலை நிமித்தமாக மும்பையில் தங்கிய நிலையில் தபஸ்வி, தனது அத்தையுடன் தங்கி வந்தார். 

இந்நிலையில் தபஸ்விக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. கிருஷ்ணா மாவட்டம் மணிகொண்டாவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான ஞானேஸ்வரிடம் பேசிப் பழகிய தபஸ்விக்கு நாளடைவில் காதல் தீ பற்றிக் கொண்டது. இருவரும் தனித்தனியே வசித்து வந்தாலும், அவ்வப்போது நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். 

மேலும் படிக்க | நடுரோட்டில், இளைஞரை கல்லால் அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலி...

இந்நிலையில் கொரோன ஊரடங்கின்போது ஞானேஸ்வரனுக்கு பார்த்து வந்த வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டது. சிலகாலம் வீட்டிலேயே வசித்து வந்தவரை காதலி தபஸ்வி சந்திப்பதற்கும், பேசுவதற்கும் மறுத்து விட்டார். வேலையில்லாத காரணத்தினால்தான் தன்னை பிரேக்அப் செய்ததாக நினைத்துக் கொண்ட ஞானேஸ்வர், செய்வதறியாயது திணறிப் போய் நின்றார். 

ஞானேஸ்வரன் காதலித்து தொல்லை செய்வது குறித்து தனது தோழிகளிடம் மனம் வருந்திக் கூறியிருக்கிறார் தபஸ்வி. இதைக்கேட்ட தோழிகள், 4 ஆண்டுகளாக காதலித்தவர்கள் பிரிந்து சென்றதை நினைத்து வேதனையடைந்தவர்கள் காதலர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்கு ஒரு முடிவெடுத்தனர். 

அதன்படி செவ்வாய்க்கிழமை தபஸ்வியின் தோழிகள் ஞானேஸ்வரனை ரகசியமாக தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். இதையடுத்து தனது தோழியையும் வரவழைத்து சமாதானம் பேசுவதற்கு முயற்சி செய்தனர். ஆனால் இந்த சந்திப்பை தபஸ்வியோ, துளியவும் விரும்பியிருக்கவில்லை. 

மேலும் படிக்க | ரயிலில் கடத்தப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகள்...! அதிரடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள்...!

ஞானேஸ்வரன், திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியபோதும், காதலனை வீட்டை விட்டு வெளியேற்றுவதிலேயே மும்முரமாக இருந்தார். அப்போது காதலர்கள் இருவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கட்டும் என முடிவெடுத்த தோழிகள் வேறு அறைக்கு சென்று விட்டனர். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஞானேஸ்வரன், அறுவை சிகிச்சை செய்யும் கத்தியை கையில் எடுத்து காதலி தபஸ்வியின் கழுத்தில் சரமாரியாக குத்திக் கிழித்தார். 

தபஸ்வியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த தோழிகள் தபஸ்வி கொலையானதைப் பார்த்து திடுக்கிட்டுப் போயினர். திருமணம் செய்ய மறுத்த காதலியை ஆத்திரம் தீர குத்திக் கொலை செய்து விட்டு தப்பியோடிய ஞானேஸ்வரனை அக்கம்பக்கத்தினர் பிடித்து கயிற்றால் கட்டிப் போட்டனர். 

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த குண்டூர் போலீசார், தபஸ்வியின் உடலைக் கைப்பற்றியதோடு, பொதுமக்களால் பிடிக்கப்பட்ட ஞானேஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலனை தேர்ந்தெடுக்கும் பெண்கள் பலருக்குமே அந்த காதலில் இருந்து வெளியேறுவதற்கோ, மனதில் பட்டதை மேற்கொள்வதற்கோ இதுவரையிலும் உரிமை இல்லாமல்தான் உள்ளது.

மேலும் படிக்க | மூதாட்டியைக் கொன்று பீரோவில் மறைத்து வைத்த அவலம்...