மனைவி குழந்தையை விபத்தில் இழந்த ஆண் குரங்கு... மக்களை தாக்கி வரும் சம்பவம்!!

மனைவி குழந்தையை விபத்தில் இழந்த ஆண் குரங்கு... மக்களை தாக்கி வரும் சம்பவம்!!

கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வரும் ஆண்குரங்கு இதுவரை 15க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளதாக பொதுமக்கள் புகாரளித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பூத்தூர் கிராமத்தில் மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் சாலையில் கடந்த 10 நாட்களாக ஆண் குரங்கு ஒன்று கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர்களை காலை மற்றும் மாலை நேரங்களில் துரத்தி துரத்தி சென்று தாக்கி வருகிறது.  இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோரை குரங்கு துரத்தும் போது விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நடந்து செல்பவர்களை குரங்கு எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பதாகவும், வாகனத்தில் செல்பவர்களை மட்டும் துரத்தி சென்று கடிப்பதாக கூறியுள்ளனர்.  இதுவரை 15க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து வனத்துறையிடம் தெரிவித்தும் குரங்கை பிடிக்க தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை.  இதே பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த ஆண் குரங்குடன் பெண் குரங்கு, தனது குட்டி குரங்கு ஒன்று என மூன்று குரங்குகள் வந்ததாகவும் அதில் பெண் குரங்கு காரில் அடிப்பட்டு இறந்ததாகவும், குட்டி குரங்கு இருசக்கர வாகனத்தில் அடிபட்டு இறந்ததாகவும் அந்த சம்பவத்திலிருந்து இந்த குரங்கு இது போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  

பொது மக்களை அச்சுறுத்தும் குரங்கை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிக்க:  யாஷிகா ஆனந்த் பேயாக மிரட்டும் " சைத்ரா " படத்தின் டிரைலர்...!!!