வங்கியில் திடீரென தீ விபத்து...

வங்கியில் திடீரென தீ விபத்து...

சென்னை | கொடுங்கையூர் எம்.ஆர் நகர் அழகேசன் தெருவில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. யுபி.எஸ் கருவியில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக மாறியுள்ளது. வங்கியில் இருந்த அலாரம் ஒலித்ததால் அங்கிருந்த காவலாளி உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | திடீரென தீப்பற்றி எரிந்த காரால் பிரதான சாலையில் பரபரப்பு...

தகவலின் பேரில் வியாசர்பாடி, வ.உ.சி நகர், மற்றும் எஸ்பிளனேடு ஆகிய மூன்று தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

காலை நேரம் என்பதால் வங்கியில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் எந்தவிதமான பொருட் சேதமும், உயிர் சேதமும் ஏற்படவில்லை என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | தீயணைப்பு துறைக்கு விண்ணப்பித்த பெண்கள் மீது தடியடி...