நீதிமன்றத்தில் அகற்றப்பட்ட அம்பேத்கர் படம் ..! தொடரும் வழக்குரைஞர்கள் போராட்டம்...!!

நீதிமன்றத்தில் அகற்றப்பட்ட அம்பேத்கர் படம் ..! தொடரும் வழக்குரைஞர்கள் போராட்டம்...!!

திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படம் திடீரென்று அகற்றப்பட்டதால் இதற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு போராட்டம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் உள்ள திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு உள்ளே மூன்று டாக்டர் அம்பேத்கர் படங்கள் திடீரென்று அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர்கள் இணைந்து நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், உடனடியாக அம்பேத்கர் படம் நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும்  இல்லையென்றால் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம் செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தொடர்ந்து, நாளை மறுநாள் அம்பேத்கர் பிறந்தநாள் வருகிறது அதற்குள்ளாக அம்பேத்கர் படம் நீதிமன்றத்திற்குள் வைக்கப்பட  வேண்டும் எனவும் இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் போராட்டத்தில் வலியுறுத்தி போராட்டம் செய்தனர்.