அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் மோதல்...!! காவல்துறை வாகனம் உடைப்பு...!! 

அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் மோதல்...!! காவல்துறை வாகனம் உடைப்பு...!! 

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில்  ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து, காவல் ஆய்வாளர் வாகனம், 108 வாகனம், 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஆகியவை  உடைத்தெறியப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை முதல் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடைசி நிகழ்ச்சியாக பட்டாளம்மன் கோவில் தெரு, இளைஞர்களும் தெ,கல்லுப்பட்டி இளைஞர்களும் அக்கினி சட்டி மற்றும் மேளதாளங்களுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்தனர். அப்பொழுது திடீரென இரண்டு கோஸ்டிகளுக்கும் யார் முதலில் மரியாதை செய்வது என்று தகராறு ஏற்பட்டு பின்னர் அடிதடியாக மாறியது. இதில் விழா கமிட்டியாளர்கள் வைத்திருந்த நாற்காலிகள் மற்றும் இருசக்கர வாகனங்களை விழாவிற்கு வந்திருந்த இளைஞர்கள் அடித்து நொறுக்கினார்.

மேலும் மோதலை தடுக்க வந்த காவல்துறையிரை மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் விரட்டினர். இதை தொடர்ந்து காவல் நிலையத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். 
 மேலும் காவல் நிலையத்திற்குள் கல் வீச்சு வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆய்வாளர் வாகனம், 108 வாகனம் மற்றும்  பேருந்து கண்ணாடிகள் உடைத்தன. மேலும் 15க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை உடைத்தனர். அவர்கள் கல் எரிந்ததில் காவல்துறை ஆய்வாளர்  மீனாட்சி உட்பட  13 காவல்துறையினருக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து இச்சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் வந்து பார்வையிட்டார். கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர். இதனால் பெரியகுளத்தில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டு வருகிறது மேலும் பெரியகுளம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலவரத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கலவரம் ஏற்பட்ட பகுதியை பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து பெரியகுளம் வட்டாட்சியர்  ஷரிப் ஆகியோர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.