காத்தாடி மாஞ்சா நூல்... உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர்!!

காத்தாடி மாஞ்சா நூல்... உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர்!!

காத்தாடி மாஞ்சா நூல் மாட்டி ஒருவர் கழுத்தறுந்த நிலையில் இருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் நிக்கி சரன், வயது 33.  அவரது பெண் தோழி வந்தனா, வயது 33 சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர்.  இருவரும் பணியை முடித்துவிட்டு சென்னை தேனாம்பேட்டை விஜயராகவா தெருவில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது நிக்கி சரண் கழுத்தில் மாஞ்சா நூல் மாட்டி கழுத்தறுத்த நிலையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

அவருடன் பயணித்த பெண் தோழி வந்தனா சுதாரித்துக் கொண்டு தனது ஆண் நண்பரை காப்பாற்ற மாஞ்சா நூலை இழுத்த பொழுது கை வெட்டுப்பட்ட நிலையில் இருவரும் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டுள்ளனர். அருகே இருந்த பொதுமக்கள் அவரை மீட்டெடுத்து அதே தெருவில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் முதலுதவி வழங்கப்பட்டுள்ளது.  நிக்கி சரனின் கழுத்து பலமாக வெட்டுப்பட்ட நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  நிக்கி சரண் மற்றும் வந்தனா ஆகிய இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க:  இனி அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் கனவு நிகழ்ச்சி...முதலமைச்சர்!!