மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி!!! 1 மணி நேரத்தில்............

மனித உருவத்தில் பிறந்த  ஆட்டுக்குட்டி!!! 1 மணி நேரத்தில்............

பரமக்குடி அருகே புதுக்குடி கிராமத்தில் மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி ஒரு சில மணி நேரத்தில் உயிரிழந்தது. வறட்சியான ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம் கைவிட்டதால் ஏராளமானோர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து லாபம் எட்டி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புதுக்குடி கிராமத்தில் விவசாயி சந்திரன் என்பவர் 20 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரின் ஒரு ஆடு சினையாக இருந்துள்ளது. இன்று காலை அந்த அந்த ஆடு பிரசவித்துள்ளது.

மேலும் படிக்க | அதிமுக பஞ்சாயத்து யூனியன் சேர்மனுக்கு எதிரான நிலமோசடி - சிபிசிஐடி விசாரணை - நீதிமன்றம்

மனித உருவ வடிவத்தில் ஆட்டுக்குட்டி பிறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறு குழந்தை படுத்திருப்பது போல் அந்த ஆட்டுக்குட்டி உள்ளது. மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி பிறந்த ஒரு சில மணி நேரத்தில் உயிரிழந்தது. மனித உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டியை கிராம மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்