காரைக்காலில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழப்பு...!!

காரைக்காலில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழப்பு...!!

காரைக்காலில் 84 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

காரைக்கால் பெசன்ட் நகரை சேர்ந்த 84 வயது முதியவர் உடல் நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த 6 தேதி சென்றுள்ளார்.  அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த பொழுது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  அவர் ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  சிகிச்சையினால் அவர் குணமடைந்ததாக கடந்த 10ம் தேதி தஞ்சாவூரில் இருந்து காரைக்காலில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் நேற்று மதியம் திடீரென அவர் உயிரிழந்துள்ளார்.  இவருக்கு இணை நோய் இருப்பதும் வயது முதிர்வும் தற்போது கொரோனா பாதிப்பும் இருந்ததால் உயிரிழந்திருக்கலாம் என நல்வாழ்வுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு, தனியார் அமைப்பினர் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.  கடந்த 10 நாட்களில்  கொரோனா தொற்றுக்கு  இரண்டாவதாக  முதியவர் உயிரிழந்திருப்பது,  காரைக்காலில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்க:   அனுமதியற்ற விடுமுறை..... 4 பேர் பணியிடை நீக்கம்!!!