பச்சையப்பன் கல்லூரி முறைகேடு - தனி நீதிபதி உத்தரவு ரத்து...

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் கல்லூரி முறைகேடு - தனி நீதிபதி உத்தரவு ரத்து...

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான பல்வேறு கல்லூரிகளில் 2013 முதல் 2015ம் ஆண்டுகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கல்லூரிகளில் 254 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். 

இதற்கெதிராக உதவி பேராசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

மேலும் படிக்க | “குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு - வேதனை அளிக்கிறது...” உயர்நீதிமன்றம் மதுரை கிளை...

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்,  எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது இயற்கை நீதிக்கு எதிரானது எனவும் கூறினர்.  நாங்கள் போதிய தகுதியை பெறவில்லை எனக்கூறுவது தவறு எனக்கூறிய மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், பல்கலைக்கழகமும், அரசும் எங்களது தேர்வு முறையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினர்.  

பச்சையப்பாஸ் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 152 உதவி பேராசிரியர்கள் போதிய தகுதியை பெற்றிருக்கவில்லை என கூறினார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிமன்றம் உத்தரவிட்டதாலேயே உதவி பேராசிரியர்களின் கல்வி தகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததாக கூறினார்.

மேலும் படிக்க | பெற்றோரை பிரிந்து கொத்தடிமைகளாக வேலை செய்த குழந்தை தொழிலாளிகள் : 28 பேரை மீட்டது காவல்துறை !!

இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் நடத்திய விசாரணையில் 152 உதவி பேராசிரியர்களின் வெய்டேஜ் மதிப்பெண்'னில் மட்டுமே தவறு நிகழ்ந்துள்ளதாகவும், ஆசியர்களின் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக உறுதி ஆகாத நிலையில் 254 உதவி பேராசியர்களின் பணி நியமனத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின்  உத்தரவு நிலைக்கத்தக்கல்ல எனக்கூறி வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை தனி நீதிபதியின் உத்ததரவு நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | சென்னை உயர்நீதிமன்றம் மூடல்....!! என்ன காரணம்...?