VAO - க்கு அரிவாள் வெட்டு: போலீசார் வழக்கு பதிவு

VAO - க்கு அரிவாள் வெட்டு: போலீசார் வழக்கு பதிவு

தூத்துக்குடி வல்லநாடு அருகே உள்ள முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்ஸ்சிஸ் (வயது 56) என்பவருக்கு அரிவால் வெட்டு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்து வருபவர் லூர்து பிரான்சிஸ் இவர் இன்று இவர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கத்தி மற்றும் அறிவாளுடன் அலுவலகத்திற்கு நுழைந்த 2 நபர்கள் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிசை சரமாரியாக கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டினர் இதில் பலத்த காயம் அடைந்த அவரது அவர்கள் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடோடி வர வெற்றியின் நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க | இந்தியாவின் அடுத்து 25 ஆண்டுகள் மிகவும் சவாலான ஆண்டுகள் - ஆர்.என்.ரவி

கிராம நிர்வாக அலுவலகத்தில் மர்ம நபர்கள் புகுந்து கிராம நிர்வாக அலுவலர் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது தொடர்ந்து இதுகுறித்து முறப்பநாடு காவல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்