விபத்தில் சிக்கிய புள்ளி மான்...!

விபத்தில் சிக்கிய புள்ளி மான்...!

கடலூர் மாவட்டம் வேப்பூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. வேப்பூர் அருகே உள்ள இந்த சாலையில் ஐந்து வயது உடைய புள்ளிமான் ஒன்று  சாலையை கடந்து செல்ல முயன்ற போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ  இடத்திலேயே மான் பலியானது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விபத்தில் இறந்த மாணவியின் உடலை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு கொண்டு சென்றனர். பின்னர் வேப்பூர் அருகில் உள்ள காப்பு காட்டில் மானின் உடலை அடக்கம் செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.