குழந்தை போல் ஆனந்த குளியலிட்ட யானை தெய்வானை....!!

குழந்தை போல் ஆனந்த குளியலிட்ட யானை தெய்வானை....!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் யானைக்கு புதியதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில் குழந்தை போல் ஆனந்த குளியலிடும் காட்சி அனைவரையும் கவர்ந்துள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான 27 யானைகளுக்கு நவீன குளியல் தொட்டி அமைப்பதற்கான அறிவிப்பை சட்டசபையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.  இதனையடுத்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் யானை தெய்வானைக்கு சவர் வசதியுடன் கூடிய குளியல் தொட்டி சரவண பொய்கையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனை இன்று தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.  இந்த தொட்டியில் யானை தெய்வானை குழந்தை போல் ஆனந்த குளியலிட்டது.  மேலும் தொட்டியில் குதூகலமாக அங்கு இங்கும் சுத்தி வந்து ஆனந்த குளியலிட்டது யானை தெய்வானை.

இதையும் படிக்க:  அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்....!!