பேருந்தின் மேல் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் இளைஞர்கள்...! வீடியோ வைரல்...!

பேருந்தின் மேல் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் இளைஞர்கள்...! வீடியோ வைரல்...!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் மாநகரப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும்போது படிக்கட்டில் தொங்கியபடியும், பேருந்தின் ஜன்னல் கம்பியைப் பிடித்து தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் பல உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் அவ்வப்போது எச்சரித்து அறிவுரைகளும் வழங்கி வருகின்றனர்.

தொடர்ந்து மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையம் சார்பிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போலீசார் விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிராட்வே முதல் அண்ணா நகர் வரை செல்லும் மாநகரப் பேருந்து நேற்று கோயம்பேடு சுற்றுப்பாலம் வழியாக செல்லும்போது இளைஞர்கள், மாணவர்கள் சிலர் அப்பேருந்தின் மீது ஏறி அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், பேருந்தின் மீது ஏறி பயணம் மேற்கொண்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : சிசிடிவி செயலிழந்தது எப்படி...? யார் காரணம்..? ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை...!