குளத்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது!

மெஞ்ஞானபுரம் அருகே சடயநேரி குளத்திலிருந்து குளத்து மண் ஏற்றி கொண்டு வந்த இரண்டு டிப்பர் லாரிகள் வந்தன.

குளத்து மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது!

திருச்செந்தூர் தாலுகா காவல்நிலைய உதவி ஆய்வாளர் சோனியா மற்றும் காவலர்கள்  இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். மெஞ்ஞானபுரம் அருகே சடயநேரி குளத்திலிருந்து குளத்து மண் ஏற்றி கொண்டு வந்த இரண்டு டிப்பர் லாரிகள் வந்தன. அந்த லாரிகளை மறித்து சோதனையிட்டதில் அனுமதியின்றி குளத்து மண் கடத்தியது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் லாரி டிரைவர் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான், வடக்கு செழியநல்லூரை சேர்ந்த பாலமுருகன் பத்மானேரி வேலன் குடியிருப்பு, மேல தேவநல்லூரை சேர்ந்த முத்து என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து குளத்து மண்ணுடன் இரண்டு டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் இரண்டு பேரையும் சிறையில் அடைத்தனர்.