பாளையங்கோட்டை சிறையில் திடீர் சோதனை!

பாளையங்கோட்டை சிறையில் திடீர் சோதனை!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை அதிகாரிகள் புகார் அளித்ததின் பேரில் பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சார்ந்த செல்வம் என்ற பிரம்மா செல்வம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சிறை அறையை சோதனை செய்த சிறை துறை அலுவலர் வினோத் அங்கு செல்போன் மற்றும் சிம்கார்டுகளையும் கண்டறிந்தார். இதனை அடுத்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.