பிரபல நடிகரின் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்திய 2 மர்மநபர்கள்!

பிரபல நடிகர் வீட்டில் மர்ம நபர்கள் 2 பேர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல நடிகரின் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்திய 2 மர்மநபர்கள்!

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தவர்  ஹிப் ஹாப் ஆதி. ரேடியோ மிர்ச்சியில் ’கிளப்புல மப்புள’ என்ற Rap பாடல் மூலம் தன் பயணத்தை தொடங்கிய ஆதி, அதன்பின் ‘எதிர் நீச்சல்’, ’வணக்கம் சென்னை’ படத்தில் பாடலை பாடி அனைவரிடமும் பிரபலமானார். அப்படியே படிபடியாக வளர்ந்து ‘மீசையே முறுக்கு’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தி கொண்டார். இப்படி திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதியின் வீட்டின் மேல் திடீரென 2 மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் வீட்டில் நடந்த இந்த சம்பவத்தால், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக ஹிப் ஹாப் ஆதி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தப்பி ஓட முயன்ற இரண்டு நபர்களையும் வளைத்துப் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையின்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் யாருடைய வீடு என்று தெரியாமலேயே கல் எரிந்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 நபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். இருப்பினும் இந்த கல்வீச்சு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.