மகன் என்று வழக்கு பதிந்த தம்பதியிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட நடிகர் தனுஷ்..! நோட்டீஸால் பரபரப்பு!

கதிரேசன் - மீனாட்சி தம்பதியிடம் நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மகன் என்று வழக்கு பதிந்த தம்பதியிடம்  10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்ட நடிகர் தனுஷ்..! நோட்டீஸால் பரபரப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் தனுஷை தனது மகன் என்று கூறி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அத்துடன் விடாமல் ஊடகங்களிலும் ஒரு சில போட்டோக்களை காட்டி தனுஷ் எங்களுடைய  மகன் தான் என்று கூறி பேட்டி அளித்தனர்.

இதனிடையே மதுரை உயர்நீதிமன்றக்கிளை இந்த வழக்கை ரத்து செய்துவிட்டது. அதற்குபிறகும் அவர்கள் தனுஷ் தங்களை கொலை செய்ய முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவை பெற்று விட்டதாகவும் கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுசுக்கும் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தம்பதியினரின் நோட்டீஸை அடுத்து, கதிரேசன் - மீனாட்சி அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லையென்றால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என்று தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தற்போது இந்த நோட்டீசால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.