என்ன டி.ஆர்.சாரே நியாமா இது: சிம்புக்கு பிரச்னை வெளியே இல்ல அவங்க அப்பா தான்: விளாசும் நெட்டிசன்கள்...

மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது நடிகர் சிம்புவின் தந்தை  டி.ராஜேந்தர்  வழக்கு தொடர்ந்துள்ளார்.

என்ன டி.ஆர்.சாரே நியாமா இது: சிம்புக்கு பிரச்னை வெளியே இல்ல அவங்க அப்பா தான்: விளாசும் நெட்டிசன்கள்...

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனைவரும் சிம்பு ஒரு ஹிட் படத்தோடு கம்பேக் கொடுத்துள்ளார் என மாநாடு வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் ஒருவரை தவிர. அவர் வேறு யாருமல்ல சிம்புவின் தந்தை டிஆர் தான். அதாவது மாநாடு படம் வெளியாவதற்கு முன்பு சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாததால் பைனான்சியர் உத்தம் சந்திற்கு கொடுக்க வேண்டிய 5 கோடி ரூபாயை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியால் கொடுக்க முடியவில்லை.

இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அப்போது சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பொறுப்பேற்று கொண்டதோடு, ஒருவேளை ரூ. 5 கோடிக்கு மாநாடு சாட்டிலைட் விற்பனை ஆகவில்லை என்றால் மீதமுள்ள தொகையையும் அவரே கொடுப்பதாக உத்தரவாதம் அளித்த பின்னரே மாநாடு படம் திரைக்கு வந்தது.

ஆனால் தற்போது மாநாடு சாட்டிலைட் உரிமையை தனக்கு தெரியாமலேயே விற்பனை செய்துள்ளனர் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பைனான்சியர் உத்தம் சந்த் மீது டி.ராஜேந்தர் வழக்குத் தொடர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநாடு படம் வெளியாகி இவ்வளவு நாள் ஆன நிலையில் இன்னும் பிரச்சனை ஓயவே இல்லை.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறுகையில், வெற்றி கிரீடத்தை மக்களும் உழைப்பும் இணைந்து தலையில் சூடியுள்ள நேரத்தில் அதை கொண்டாடி மகிழ்வதை விட்டு விட்டு வழக்கா? நல்லதே வெல்லும் நன்றி இறைவா என கூறியுள்ளார்.இந்த நிலையில் டி.ராஜேந்தர் தொடர்ந்துள்ள இந்த வழக்குக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.