இளைஞரை தாக்கிய தாடி பாலாஜியின் மனைவி...காரணம் என்ன?!!

இளைஞரை தாக்கிய தாடி பாலாஜியின் மனைவி...காரணம் என்ன?!!

பிரபல நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நள்ளிரவில் இளைஞர் ஒருவரை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெள்ளித்திரையில் அறிமுகமாகி  சின்னத்திரை மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தாடி பாலாஜி.  இவருக்கும் இவரது மனைவி நித்யா என்பவருக்கும் இடையே பல வருடங்களாக தகராறு நடந்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாதவரம் சாஸ்திரி நகரில் வசித்து வரும் நித்யா, அருகில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம் என அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் எதிர்வீட்டில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி என்பவருடன் மல்லுக்கட்டிய நித்யா, காவல் நிலையத்துக்கும் வீட்டுக்கும் அலைந்து வருகிறார்.  இந்த நிலையில் மற்றொருவரையும் அதே போல புரட்டியெடுத்து மீண்டும் ஒரு சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளார். மாதவரம் பொன்னியம்மன் மேடு வி.பி.சி. நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் கலைச்செல்வன். அதே பகுதியில் கடையொன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு திடீரென பணத் தேவை எழுந்திருக்கிறது. 

இதையடுத்து நித்யாவை நாடிய கலையரசன், அவரிடம் இருந்து 94 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.  இந்த கடன் தொகையில் 52 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுத்த நிலையில் மீதம் 42 ஆயிரம் ரூபாயை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த நித்யா, ஏப்ரல் 9-ம் தேதியன்று இரவு கலையரசனிடம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.  அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பாகி, கடும் மோதல் ஏற்பட்டது. 

இந்த மோதலில் நித்யாவுக்கும், கலையரசனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.  இதுகுறித்து அறிந்த மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்ததோடு, இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து வருகிறார். 

இதையும் படிக்க:  புயலாக வலுவடைந்தது மோச்சா.....!!