விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஒரே பார்ட்டிக்கு சென்ற தனுஷ் - ஐஸ்வர்யா...என்ன ஆச்சு தெரியுமா?

விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஒரே பார்ட்டிக்கு சென்ற தனுஷ் - ஐஸ்வர்யா...என்ன ஆச்சு தெரியுமா?

நடிகர் தனுஷும்  ஐஸ்வர்யாவும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.  தற்போது  இவர்கள் இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.

ஆனால் இவர்களுக்கு இருப்பது சாதாரண குடும்ப சண்டை தான், இருவரும் விரைவில் இணைந்து விடுவார்கள் என்று தனுஷின் தந்தை கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் இணைத்து வைக்க ஐஸ்வர்யாவின் தந்தை, நடிகர் ரஜினிகாந்த் உள்பட அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களால் முடிந்த பல விஷயங்களை செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் எதர்க்கும் பணியிற மாறி தெரியவில்லையாம்.

இந்நிலையில், விவாகரத்துக்கு பின் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்களாம். இருப்பினும் பார்ட்டியில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.  

இதனையடுத்து இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால் மனக்கசப்பு நீக்கி இருவரும் சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்த்த நண்பர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. காலம் கனிந்து நிச்சயம் இவர்கள் இருவரும் இணைவார்கள் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.