சூர்யாவின் படத்தில் இணைந்த பிரபல நடிகை.. ட்விட்டரில் டிரண்டாகும் புகைப்படம்

சூர்யாவின் படத்தில் இணைந்த பிரபல நடிகை ராதிகாவில் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் படத்தில் இணைந்த பிரபல நடிகை.. ட்விட்டரில் டிரண்டாகும் புகைப்படம்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி தனது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் சில படங்களை தயாரித்து வழங்கியும் வருகிறார்.

அந்தவகையில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் மற்றும் உடன்பிறப்பே, ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், ஓ மை டாக் ஆகிய படங்களை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்படங்கள் மாதம் ஒன்று என்ற கணக்கில் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாக உள்ளது.

இது தவிர தற்போது ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன், வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் சூர்யா நடித்து வருகிறார்.  இப்படத்தில் நாயகியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகை ராதிகா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா உடன் அமர்ந்து காபி பருகும் புகைப்படம் ஒன்றை நடிகை ராதிகா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.