அவர் என்னை வேண்டாம் என சொல்லி விட்டார்.. நடிகை மஞ்சிமா மோகன் போட்ட போஸ்ட் என்ன?

அவர் என்னை வேண்டாம் என சொல்லி விட்டார் என நடிகை மஞ்சிமா மோகன் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் என்னை வேண்டாம் என சொல்லி விட்டார்.. நடிகை மஞ்சிமா மோகன் போட்ட போஸ்ட் என்ன?

தமிழ் மற்றும் மலையாள நடிகையாக இருப்பவர் மஞ்சிமா மோகன். சமீபத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலிப்பதாக வெளிவந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து இவர் நடித்த படம் "FIR". இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையடுத்து, இந்த படத்தின் இயக்குனர் மனு ஆனந்துக்கு உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்திருந்த மஞ்சிமா மோகன், மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு நான் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளேன் ஆனால் அவர் என்னை வேண்டாம் என சொல்லி விட்டார் என்று மஞ்சிமா பதிவு செய்துள்ளார்.

மஞ்சிமா மோகனின் இந்த பதிவிற்கு பதில் கூறிய மனு ஆனந்த், நான் உண்மையில் உங்கள் விண்ணப்பத்தைப் பெறவில்லை. ஒருவேளை இமெயிலில் தொலைந்து போயிருக்கலாம். நன்றி மஞ்சிமா.. என்று பதிவிட்டிருந்தார்.