தனுஷின் விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யாவின் முதல் வேலை என்ன தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை தான் பிரிய முடிவு செய்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தனுஷின் பிரிவிற்கு பின் ஐஸ்வர்யா செய்த முதல் வேலை என்ன என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, கஸ்தூரி ராஜா பேட்டி ஒன்றில் தற்போது இருவரும் ஜதராபாத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதுபோலவே ஹைதராபாத்தில் இருக்கும் ஐஸ்வர்யா தன்னுடைய அடுத்த படத்தை இயக்குவதில் தீவிரமாக இறங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குமுன்பு ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தற்போது ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்க இருப்பதாகவும், இந்த ஆல்பம் குறித்த ஆலோசனையில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தின் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் தற்போது ‘வாத்தி’ படப்பிடிப்பிற்காக தனுஷூம் ஹைதராபாத்தில் இருப்பதாகவும், தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவருமே ஒரே ஓட்டலில் தான் தங்கி இருக்கிறார்கள் என்றும் தகவல் கூறுகிறது.
Aishwarya Rajnikanth starts prep for her music video.PPM in full swing in Hyd,directed by @ash_r_dhanush and produced by @kumartaurani @PprernaArora and @bayfilms_llp . It will release on #ValentinesDay @ssalmanmshaikh @manan_sampat pic.twitter.com/gl8LD7pPSu
— BayFilms (@bayfilms_llp) January 22, 2022