மாயாஜால அறிவியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம்!!நடிகை ஜோதிகா...

ஆயுர்வேதா பற்றி கூறிய ஜோதிகா...

மாயாஜால அறிவியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம்!!நடிகை ஜோதிகா...

இந்த மாயாஜால அறிவியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம் என்று ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா  இருவரும் சமீபத்தில் ஓய்வெடுப்பதற்காக கேரளா சென்றனர் என்பது குறித்த தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் கேரளாவில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கேற்ப ஜோதிகாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ’இந்த மாயாஜால அறிவியலை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வோம்’ என்று வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

ஆயுர்வேதத்தின் மாயாஜாலம் குறித்து நடிகை ஜோதிகா கூறியிருந்தார். திருச்சூர், ராஜா கடற்கரையில் எனது வாழ்க்கையின் மிகவும் நிறைவான 21 நாட்களாக சிறிது நேரம் ஒதுக்கினேன். உண்மையான மந்திரம் இயற்கையில் அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி படைத்தது என்று என்னை நம்ப வைத்த இடம் இந்த மாயாஜால் தான் என்று கூறியுருந்தார்.

மேலும், இந்தியர்களாகிய நாம் நமது நாட்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளான ஆயுர்வேதம் மற்றும் யோகா பயிற்சியை  செய்வதன் மூலம் அவற்றை மதிப்போம். மேலும் இந்த மாயாஜால அறிவியலை நமது அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவோம் என்று ஜோதிகா கூறியுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

View this post on Instagram

A post shared by Jyotika (@jyotika)