எம்.ஜி.ஆரின் பச்சைக்கிளி!-அன்றும் இன்றும் !  

மேட்டா ரூங்ராத் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் யாரென்று தெரியுமா?’என இன்றைய தலைமுறையினரைக் கேள்வி கேட்டால் தெரியாது ஆனால், 55 வயதைக் கடந்தவர்கள் உடனே கூறிவிடுவார்கள்.

எம்.ஜி.ஆரின் பச்சைக்கிளி!-அன்றும் இன்றும் !  

மேட்டா ரூங்ராத் என்ற பெயரைக் கேள்விப்பட்டதுண்டா? அவர் யாரென்று தெரியுமா?’என இன்றைய தலைமுறையினரைக் கேள்வி கேட்டால் தெரியாது ஆனால், 55 வயதைக் கடந்தவர்கள் உடனே கூறிவிடுவார்கள். அவர்தான் எம். ஜி.ஆரின் பச்சைக்கிளி என்று பளிச்சென்று கூறுவர்கள்.  

1973 ஆம் ஆண்டு வெளிவந்த அவரது சொந்தப்படமான  உலகம் சுற்றும் வாலிபனில் கௌரவ வேடத்தில் நடித்தவர் தான் மேட்டா ரூங்ராத். இவர் தாய்லாந்தை சேர்ந்த நடிகை. பச்சைக்கிளி.. முத்துச்சரம்.. முல்லைக்கொடி யாரோ? பாவை என்னும் பேரில் வரும் தேவன் மகள் நீயோ?’என்ற பிரபலமான பாடலுக்கு எம். ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்து ஆடியவர்மேட்டா ரூங்ராத். 

25 வயது இளம் மங்கையான மேட்டா ரூங்ராத் அதே பாடலின் வாயசைப்பில் ‘பொன்னின் நிறம் பிள்ளை மனம் வள்ளல் குணம் யாரோ? மன்னன் எனும் பேரில் வரும் தேவன் மகன் நீயோ?’என்று எம். ஜி.ஆரை புகழும் வரிகள் வரும்போது, ரசிகர்கள் விசிலடித்து ஆர்ப்பரித்தனர்.   

உலகம் சுற்றும் வாலிபன் வெளிவந்து 48 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது மேட்டா ரூங்ராத்துக்கு வயது 73 ஆகிறது. முதுமை என்று சொல்ல முடியாத அளவுக்கு இளமையாக சும்மா ஜீன்ஸ் போட்டு வலம் வருகிறார்.  மேட்டா ரூங்ராத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாக அந்தக் குழந்தை முகம் இன்றும் மாறாமல் இருக்கிறது என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.