காமெடி கதைகளத்தில் நயன்தாரா..! அடுத்தடுத்து ரிலீசுக்காக தயாராகும் படங்கள்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீசாகும் நயன்தாரா படம்..!

காமெடி கதைகளத்தில் நயன்தாரா..! அடுத்தடுத்து ரிலீசுக்காக தயாராகும் படங்கள்..!

லேடி சூப்பர் ஸ்டார் என மக்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. மலையாள திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான அவர், 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50-க்கும் மேற்பட்ட படங்களை நடித்து, முன்னணி நடிகையாக திகழ்பவர்.

ஹீரோயின்களை மையமாக வைத்து படம் எடுத்தால், வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் ரீதியாகவும் வெற்றி பெறும் என்பதற்கு முன் உதாரணமாக திகழ்பவர் நயன்தாரா. பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் மற்றும் ஹீரோயின்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்து வருகிறார்.  அந்த வகையில், ரஜினியுடன் இணைந்து நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக தென்கொரிய படத்தின் அதிகாரப்பூர்வ தழுவலை கொண்டு எடுக்கப்பட்ட நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. 

அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார். அத்துடன் ஒன்பது வருடங்களுக்கு முன் கோபிசந்துடன் அவர் நடித்து வெளிவராமல் இருக்கும் தெலுங்கு திரைப்படமும் இந்த வருடம் வெளியாகவுள்ளது. 

இப்படி அடுத்தடுத்து கை வரிசையில் பல படங்களை வைத்துள்ள நயன்தாரா, அடுத்ததாக தமிழில் காமெடி திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலுவின் தெனாலிராமன், எலி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் யுவராஜ் தயாளன் நயன்தாராவின் படத்தையும் இயக்கவுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.