விஜய் மக்கள் இயக்கம் சார்பில்.... அம்பேத்கார் பிறந்தநாள் கொண்டாட்டம்!!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில்.... அம்பேத்கார் பிறந்தநாள் கொண்டாட்டம்!!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மரியாதை செலுத்த பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 15ம் தேதி முதல் மே மாதம் வரை ஒவ்வொரு மாவட்ட வாரியாகவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ளது.  கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ள புஸ்ஸி ஆனந்த், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடுவது குறித்தும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதனோடு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் புதிய படிவம் விரைவில் வழங்கப்பட உள்ளது.  அந்த படிவத்தில் அரசியல் இயக்கம் தொடங்குவதற்கான ஒப்புதல் மற்றும் ஆலோசனைகள் தொடர்பான தகவல்கள் இருப்பதாக மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.  இதனோடு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான படிவமும் வழங்கப்பட உள்ளது.  

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:   ரியல் எஸ்டேட்களாக மாற்ற அனுமதிக்காமல்....உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!!