இசை மழையில் நனைய தயாரா!! துபாய் எக்ஸ்போவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

துபாய் எக்ஸ்போ 2020 நிகழ்ச்சியில் இளையராஜா, இசை கச்சேரி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இசை மழையில் நனைய தயாரா!! துபாய் எக்ஸ்போவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

துபையில் நடந்து வரும் பிரபலமான நிகழ்ச்சியான 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜா, இசை கச்சேரி நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வரும் மார்ச் மாதம் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், "வணக்கம் துபாய் எக்ஸ்போ 2020. நீங்கள் அனைவரும் விரும்பும் இசையால் நிரம்பிய பயணத்திற்கு வந்து, நிகழ்ச்சிகளை நடத்தி, உங்களை அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். துபாய் எக்ஸ்போ 2020 இல் மார்ச் 5 அன்று இரவு 9 மணிக்கு ஜூபிலி பார்க்கில்  என்னுடன் கலந்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.