ஆன்டி இண்டியன் பார்த்து வாயடைத்து போன முன்னணி இயக்குனர்கள்...

ஆன்டி இந்தியன் திரைப்படத்தின் பிரிமியர் ஷோ சென்னையில் நடைபெற்றது

ஆன்டி இண்டியன் பார்த்து வாயடைத்து போன முன்னணி இயக்குனர்கள்...

தமிழ் திரையுலகின் சர்ச்சையான விமர்சனங்களுக்கு சொந்தக்காரர் ப்ளுசட்டை மாறன். இவர் விமர்சனம் செய்யும் திரைப்படங்கள் பிரபலமாகின்றதோ இல்லையோ, ஆனால் இவரது விமர்சனம் நிச்சயம் ட்ரோல் மெட்டீரியலாக நெட்டிசன்கள் மத்தியில் கொண்டாடப்படும். திரைப்பட விமர்சகராக மட்டுமே இருந்த ப்ளுசட்டை மாறன், ஆன்டி இந்தியன் திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனர் அவதாரத்தையும் எடுத்திருந்தார். இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அப்படத்திற்கான எதிர்பார்ப்பு திரையுலகினரின் மத்தியில் காணப்பட்டது. 

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றது. தமிழில் வெளியான திரைப்படங்களை விமர்சித்த புளுசட்டை மாறனின் திரைப்பட ட்ரைலரை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரது தொனியிலேயே விமர்சிக்க ஆரம்பித்தனர். அது ஒரு விதத்தில் அப்படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வெளியீட்டிற்கு தயாரான நிலையில் இருக்கும் ஆன்டி இந்தியன் திரைப்படத்தின் பிரிமியர் ஷோ சென்னையில் நடைபெற்றது. அதில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா, பாக்கியராஜ், சேரன், சீமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திரைப்படத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் திரைப்படம் சமூகத்திற்கு தேவையான விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளதாகவும் படம் நிச்சயம் வெற்றி பெரும் என்றும் தெரிவித்து இயக்குனர் ப்ளுசட்டை மாறனுக்கு பொன்னாடை அணிவித்துள்ளனர். இப்படம் வருகின்ற டிசம்பர் 10 அன்று திரைக்கு வரவுள்ளது. இப்படத்தினை தயாரிப்பாளர் ஆதம் பாவா தயாரித்துள்ளார்