என்னை அடித்தே கொன்றிருப்பார்கள்... நடிகை கங்கனா ரணாவத் குமுறல்...

போலீசார் இல்லையெனில் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

என்னை அடித்தே கொன்றிருப்பார்கள்... நடிகை கங்கனா ரணாவத் குமுறல்...

சமீபத்தில் மத்திய அரசு வாபஸ் பெற்ற 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி எல்லைகளில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், ஓராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் பகுதியில் கங்கனா ரணாவத் சென்ற காரை வழிமறித்த விவசாயிகள், அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷமிட்டனர். உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட, அதன் பின்னர் கங்கனா ரணாவத்தின் கார் செல்ல விவசாயிகள் வழிவிட்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கனா ரணாவத், போலீசார் மட்டும் இல்லையெனில் தம்மை அடித்தே கொன்றிருப்பார்கள் என்றும், இந்த மக்களால் அவமானம் எனவும் குமுறலாக பேசி உள்ளார்.