அட கொடுமையே! ’பீஸ்ட்’ படம் பார்த்தவருக்கு கத்திக்குத்து; ’கே.ஜி.எப் 2’ படம் பார்த்தவருக்கு துப்பாக்கி சூடு! ஒரே நாளில் இரண்டுமா?

பீஸ்ட் படம் பார்த்தவருக்கு கத்திக்குத்தும், கே.ஜி.எப் 2 படம் பார்க்க சென்றவருக்கு துப்பாக்கி சூடும் ஒரே நாளில் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அட கொடுமையே! ’பீஸ்ட்’ படம் பார்த்தவருக்கு கத்திக்குத்து; ’கே.ஜி.எப் 2’ படம் பார்த்தவருக்கு துப்பாக்கி சூடு! ஒரே நாளில் இரண்டுமா?

கடந்த 13 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியான விஜய்யின் “பீஸ்ட்” படத்தை பார்ப்பதற்காக சென்னை அம்பத்தூரை சேர்ந்த லோகேஷ் என்பவர் சமீபத்தில் சென்றுள்ளார். அப்போது லோகேஷ் ஒரு கும்பலுடன் சண்டை ஈடுபட்டுள்ளார். இந்த சண்டையின் காரணமாக அந்த மர்ம கும்பல் ஒன்றிணைந்து நேற்று பணி முடித்துவிட்டு வீடு திரும்பிய லோகேஷை பாதியில் வழிமறித்து சுற்றி வளைத்தனர். பின் சரமாரியாக கத்தியால் குத்தி லோகேஷை கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை செய்து மர்ம கும்பலை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். விசாரணையில் ‘பீஸ்ட்’ படம் பார்த்த போது ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். 

இதேபோன்று கடந்த 14 ஆம் தேதி வெளியான யாஷின் ”கே.ஜி.எப் 2’ திரைப்படத்தை பார்ப்பதற்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது பின்னால் உட்கார்ந்து இருந்த நபர் முன் இருக்கையில் காலை வைத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது திடீரென பின் இருக்கையில் இருந்தவர் முன் இருக்கையில் இருந்தவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதனையடுத்து துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து தலைமறைவாகியுள்ளவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி ஒரே நாளில் 'பீஸ்ட்’ படம் பார்த்தவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதும், ‘கேஜிஎஃப் 2’ படம் பார்த்தவருக்கு துப்பாக்கி சூடும் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.