அடையாறு பள்ளியில் படித்தபோது நானும் அத்தகைய கொடுமைகளை எதிர்கொண்டேன்... நடிகை கௌரி பகீர்!!

அடையாறு பள்ளியில் படித்தபோது நானும் அத்தகைய கொடுமைகளை எதிர்கொண்டேன் எதிர்கொண்டேன் என நடிகை கவுரி கிஷன் தான் அனுபவித்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

அடையாறு பள்ளியில் படித்தபோது நானும் அத்தகைய கொடுமைகளை எதிர்கொண்டேன்... நடிகை கௌரி பகீர்!!

சென்னையில் உள்ள பிரபல பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் கிளாஸ் நடத்தும் சாக்கில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பலரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பி.எஸ்.பி.பி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான புகார் தொடர்பாக, அப்பள்ளியின் முதல்வரிடம் இரண்டாவது முறையாக விசாரணை நடந்து வருகிறது.

பி.எஸ்.பி.பி ஆசிரியர் ராஜகோபாலன் வகுப்புகளில் தகாத முறையில் நடந்துகொள்வதாக ஏற்கனவே மாணவர்கள் தரப்பில் பல புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், பள்ளி நிர்வாகம் அவற்றை தீவிரமாக எடுத்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை கௌரி கிஷன்
"அடையாறு பள்ளியில் படித்தபோது இதுபோன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டைதாக பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்., தான் படித்தபோது ஆசிரியர்கள் சிலர், மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதியை வைத்து பேசுவது, மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை மாணவ - மாணவியர் மீது சுமத்துவது போன்ற கொடுமைகளை தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.