நவம்பரில் சுற்றுப்பயணம் தொடங்கும் மூன்றெழுத்து நடிகர்!!!
நடிகர் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுலா செல்ல வேண்டும் என விரும்பினார். அதில் முதல் கட்டமாக தமிழகத்தின் வெள்ளகோவில் இருந்து தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.நடிகர் அஜித் நேபால் மற்றும் பூட்டான் நாடுகளில் உலக பைக் சுற்று பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
நடிகர் அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுலா செல்ல வேண்டும் என விரும்பினார். அதில் முதல் கட்டமாக தமிழகத்தின் வெள்ளகோவில் இருந்து தன்னுடைய பயணத்தை தொடங்கினார். நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவர் தன்னுடைய உலகச் சுற்றுப்பயணத்தை பல்வேறு இடங்களில் மேற்கொண்டு வந்தார்.அந்த வகையில் தற்போது தன்னுடைய முதல் சுற்றில் இந்தியா நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளை நிறைவு செய்திருக்கிறார். அதேபோல் ஈரோப்பா நாடுகளில் சில இடங்களிலும், தாய்லாந்து நாட்டில் சில இடங்களிலும் ஏற்கனவே உலக சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொண்டு உள்ளார்.
மேலும் படிக்க | ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்... உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் அஜித் தற்போது தன்னுடைய 62 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான படப்பிடிப்பு வரும் 22 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த நிலையில் நேபால், பூட்டான் ஆகிய நாடுகளில் தன்னுடைய உலக பைக் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று சென்னை திரும்பினார்.மேலும் அவர் முதல் சுற்றில் இந்தியா, பூட்டான், நேபால் நாடுகளை நிறைவு செய்து விட்டார் என அவருடைய மேலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அஜித்தின் அடுத்த உலக சுற்றுப்பயணம் வரும் நவம்பர் மாதம் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கார்.