விவேக் 2 ஆண்டு நினைவுநாள்...!! மரக்கன்றுகள் வழங்கி அஞ்சலி..!

விவேக் 2 ஆண்டு நினைவுநாள்...!! மரக்கன்றுகள் வழங்கி அஞ்சலி..!

சங்கரன்கோவில் அருகே மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சொந்த ஊரில் மரக்கன்றுகள் வழங்கி அஞ்சலி செலுத்தினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் பிறந்தவர் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக். இவர் சின்ன கலைவாணர் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர். இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் பெருங்கோட்டூர் ஆகும்.

இந்நிலையில் இவரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று சொந்த ஊரான பெருங்கோட்டூரில் அனுசரிக்கப்பட்டது. அங்குள்ள அவரின் கல்லறை மற்றும் திருவுருவப்படத்திற்கு அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரக்கன்றுகள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் இயற்கை வளத்தை பெருக்குவதற்கு அப்துல் கலாமின் வழியில் சென்ற நடிகர் விவேக் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இதை நினைவூட்டும் வகையில் அவரது திருவுருவப்படத்தின் முன்பு மரக்கன்றுகள் வைத்து அலங்கரிக்கப் பட்டிருந்தது. நிகழ்ச்சியின் நிறைவில் அங்கு இருந்த கிராம மக்களுக்கு அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினர்.