களவாணியிடமே களவாண்ட நபர் யார்? - விலை உயர்ந்த செல்போனை தொலைத்த விமல்...

திருமண நிகழ்ச்சியில் நடிகர் விமலின் விலை உயர்ந்த செல்போன் திருடு போனதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

களவாணியிடமே களவாண்ட நபர் யார்? - விலை உயர்ந்த செல்போனை தொலைத்த விமல்...

களவாணி படம் மூலம் நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த விமல், ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார். கடந்த 12-ம்தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், அப்போது தம்முடன் ரசிகர்கள் செல்பி எடுக்கும் போது தம்முடைய விலை உயர்ந்த செல்போனை அங்கு அமர்ந்திருந்த இடத்தில் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது செல்போன் காணாமல் போனதாகவும், அதனை கண்டுபிடித்து தரும்படியும் நடிகர் விமல் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் தங்க நகைகளை திருடி கைதான விக்னேஷ், அதற்கு முன்னதாக கானாத்தூர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிகிறது. இதனால் நடிகர் விமலின் செல்போனை அவர் திருடியிருக்கலாமோ? என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.