கணவனுக்காக கோவில் கட்டிய மனைவி... வைரலாகும் வீடியோ!!

ஆந்திராவில் கணவனுக்காக கோவில் கட்டி பூஜை செய்யும்  மனைவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனுக்காக கோவில் கட்டிய மனைவி... வைரலாகும் வீடியோ!!

ஆந்திராவில் கணவனுக்காக கோவில் கட்டி பூஜை செய்யும்  மனைவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பத்மாவதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் அங்கி ரெட்டி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். கணவருக்கு பின் விவசாய பணிகளை அவரது மகன் மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் பத்மாவதியின் கனவில் வந்த அவரது கணவர், தனக்கு கோவில் கட்ட சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மகன், தங்களது விவசாய நிலத்தருகே தந்தையின் சிலையை வைத்து கோவிலை கட்டியுள்ளார்.

இதனையடுத்து பத்மாவதி, தினமும் கோவிலில் உள்ள தனது கணவரின் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்து வருகின்றார். மேலும் தனது கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் மற்றும் பவுர்ணமி ஆகிய தினங்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகின்றார்.