அடேங்கப்பா!! இவர்களிடமிருந்து கடன் மோசடி பணம் இத்தனை ஆயிரம் கோடி மீட்பா!! - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சியிடம் இருந்து கடன் மோசடி பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அடேங்கப்பா!! இவர்களிடமிருந்து கடன் மோசடி பணம்  இத்தனை ஆயிரம் கோடி மீட்பா!!  - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

பணமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறை இயக்குனரகத்திற்கு பரந்த அளவிலான அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கொண்டு வந்துள்ள சமீபத்திய திருத்தங்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் கூறி, அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அரசுக்கு எதிராக கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி மற்றும் முகுல் ரோத்கி உள்ளிட்ட பல மூத்த வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.

அப்போது விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தொடர்புடைய வங்கிக்கடன் மோசடி தொடர்பான வழக்குகளில், இதுவரை அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகளில் திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.