ஜம்மு – காஷ்மீரில் 2023 ஜி-20 உச்சி மாநாடு

ஜம்மு – காஷ்மீரில் 2023 ஜி-20 உச்சி மாநாடு

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில், 18வது ஜி20 உச்சிமாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக, லடாக்கின் துணைநிலை ஆளுநர் ஆர்.கே மாத்தூர், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  


ஜி20 உச்சி மாநாட்டு நிகழ்வுகள் புது தில்லியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு உள்ள பிரகதி மைதானத்தை மாற்றியமைத்து அதை மாநாட்டிற்கான இடமாக மாற்றுவதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவின் இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஜி20 தொடர்பான சில நிகழ்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.


ஜி 20 உச்சி மாநாட்டை டெல்லியில் நடத்துவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு அதிருப்தி அளிப்பதால் பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனாவும் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளது. சீன அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,   ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பிரச்னை ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி தீர்க்கப்பட வேண்டும் மற்றும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் ஒருதலைப்பட்ச நகர்வுகளை எந்த தரப்பும் எடுக்கக்கூடாது என்று கூறினார்.


ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா சீனா பாகிஸ்தான் இடையே பிரச்சினை நிலவிய சூழலில் 2019ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசி அம்மாநிலத்தை லடாக் ஜம்மு காஷ்மீர் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.


இதனிடையே, இன்றும் நாளையும் இந்தோனேஷியாவின் பாலியில், இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். ஜி 20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் – சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 
இந்தியா – சீன எல்லையான கிழக்கு லடாக்கில் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்னை உள்ளது. இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்ப்பது பற்றி இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர்.