பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி...சொன்னது என்ன?
நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி மூலம் பிரதமர் மோடி வழங்கினார்.
ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் இடங்கள் நிரப்ப வேண்டும்:
கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மத்திய அரசுத் துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனடிப்படையில், அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அப்போது அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க: மாணவிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்...உறுதியளித்த முதலமைச்சர்!
பணிநியமனக் கடிதங்கள்:
இந்நிலையில், நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் ரோஜ்கார் மேளா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிவைத்தார். அதன்படி, அக்டோபர் மாதம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பணிநியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
காணொலி மூலம் வழங்கிய பிரதமர் மோடி:
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் குஜராத், இமாசலப்பிரதேசம் தவிர 45 இடங்களில் இருந்து 71 ஆயிரம் பேருக்கு காணொலி வாயிலாக பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், இளைஞர்களே நாட்டின் மிகப்பெரிய சொத்து எனவும், அரசு ஊழியர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபடும் எனவும் அவர் கூறினார்.
आज भारत में सरकारी और गैर-सरकारी दोनों ही क्षेत्रों में नये अवसरों की संभावना लगातार बढ़ रही है। देश में Innovation और Research को बढ़ावा देने से भी रोजगार के मौके बढ़ रहे हैं। pic.twitter.com/4FIeH8hphE
— Narendra Modi (@narendramodi) November 22, 2022