மின்சார ஒயர் மீது அணில் பாய்ந்ததால் விபரீதம்.. 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!

ஆந்திராவில் சாலையில் மின் வயர் அறுந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற ஆட்டோ கண்ணிமைக்கும் நேரத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மின்சார ஒயர் மீது அணில் பாய்ந்ததால் விபரீதம்.. 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!

சில்லகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 8 விவசாயத் தொழிலாளர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையின் குறுக்கே ஓடிக்கொண்டிருந்த அணில், ஆட்டோவை பார்த்து பயந்து அப்பகுதியில் இருந்த மின்கம்பம் மீது ஏறியதாகத் தெரிகிறது. தொடர்ந்து அங்கிருந்து அருகிலிருந்த மின்சார வயர் மீது தாவியதில், எதிர்பாராத விதமாக ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு மின்சார வயர் அறுந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்தது.

இந்த விபத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் ஆட்டோ முழுவதும் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றி எரிந்ததில், அதில் சென்ற 8 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்து எட்டு பேரின் உடல்களையும் மீட்டனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.