கணவரை டைவர்ஸ் செய்துவிட்டு மாமனாருடன் திருமணம்.. இளம்பெண் சொன்ன காரணத்தால் இளைஞர் அதிர்ச்சி

காதலித்து திருமணம் செய்துக் கொண்ட கணவனை விட்டு பிரிந்து மாமனாருடன் குடும்பம் நடத்தி வந்த இளம்பெண் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கணவரை டைவர்ஸ் செய்துவிட்டு மாமனாருடன் திருமணம்..  இளம்பெண் சொன்ன காரணத்தால் இளைஞர் அதிர்ச்சி

உத்தர பிரதேச மாநிலம் பவுடன் எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் கடந்த 2016-ம் ஆண்டு பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். 

திருமணம் முடிந்த 6 மாதத்திலேயே இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின் இருவரும் தனிதனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அந்த இளைஞரின் தந்தை திடீரென்று காணமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் இது குறித்து மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞரின் தந்தையும், விவாகரத்து பெற்ற அந்த இளைஞரின் மனைவியும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த இளைஞரின் உறவினர்கள், இது குறித்து மேலும் புகார் அளித்துள்ளனர்.
அப்போது, அந்த பெண், தான் தன்னுடைய 2-வது கணவரான மாமனாருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாகவும், அவருடனே வாழ ஆசைப்படுவதாகவும் காவல் நிலையத்தில் கூறியுள்ளார்.